திருமணம் முடிந்தும் பள்ளி சிறுமியுடன் வாட்சப் சாட்.. கதற கதற அடித்து நொறுக்கிய உறவினர்கள்.. அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பாமணி கிராமத்தை சார்ந்தவர் நவீன். இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து, மனைவி மற்றும் ஒரு வயதுடைய குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், இக்கிராமத்தை சார்ந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். 

நவீன் திருமணம் முடிந்தாலும், பள்ளி மாணவியுடன் பழகி வந்துள்ளார். மேலும், வாட்சாப் செயலி மூலமாக பேசி வந்துள்ளார். இது சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரியவரவே, இருவரையும் எச்சரித்துள்ளனர். 

நவீன் எதனையும் கண்டுகொள்ளாது இருந்து வந்த நிலையில், நவீனின் மனைவியும் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் நவீன் அடித்து நொறுக்கப்பட்டுள்ளார். 

இதில் சம்பவ இடத்திலேயே நவீன் நிலைகுலைந்து பரிதாபமாக பலியாகவே, இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் நவீனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur murder case police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->