திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து - மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கன மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனையடுத்து கனமழை காரணமாக திருவாரூர், நன்னிலம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் திருவாரூர் வட்டம் மற்றும் நன்னிலம் ஆகிய 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு காரணமாக பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvarur and nannilam taluk school holiday cancel


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->