#திருவண்ணாமலை | அதிகாலையில் அரங்கேறிய கொடூர விபத்து - உடல் நசுங்கி பலியான உயிர்கள்! - Seithipunal
Seithipunal


இன்று அதிகாலை செங்கம் அருகே தமிழக அரசு பேருந்தும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் காந்தி நகர் பகுதியில், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த தமிழக அரசு பேருந்தும், பெங்களூரில் இருந்து காய்கறிகளை ஏற்றுக் கொண்டு திருவண்ணாமலைக்கு நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கொடூரமான விபத்தில் லாரியின் ஓட்டுனர், பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக போலீஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, படுகாயம் அடைந்த 30க்கும் மேற்பட்ட பயணிகளை திருவண்ணாமலை மற்றும் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இந்த கொடூர விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvannamalai Bus Lorry Accident 2022


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->