அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கிய ஊராட்சி செயலர் விவகாரத்தில், காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட கடிதம்.. உருக்கமான தகவல்.!
Thiruvallur Govt Employee Suicide at Office Police Investigation 7 Feb 2021
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர் கே.வி.ஆர் நகர் பகுதியை சார்ந்தவர் பாஸ்கரன் (வயது 46). இவருக்கு மஞ்சுளா (வாய்த்து 42) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு இந்துமதி என்ற 28 வயது மகளும், மேகலா என்ற 25 வயது மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து, கணவருடன் வசித்து வருகின்றனர்.
பாஸ்கரன் கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள மேல்நல்லத்தூர் ஊராட்சியில் ஊராட்சி செயலராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல அலுவலகத்திற்கு சென்று பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த நிலையில், திடீரென தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் காவல் துறையினர், பாஸ்கரின் உடலில் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது குறித்த கடிதத்தில், " கடந்த 1998 ஆம் வருடத்தில் இருந்து, இன்று வரை ஊராட்சி செயலராக எனது பணியில் எந்த விதமான தவறும் நடக்காமல் நான் பார்த்துக்கொண்டேன். ஆனால், ஊராட்சியில் சிலர் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, தற்கொலை முடிவை எடுக்க வைத்துவிட்டார்கள் " என்று தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், பணியின் போதே ஊராட்சி செயலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thiruvallur Govt Employee Suicide at Office Police Investigation 7 Feb 2021