''அப்படி சொன்னால் செருப்பால அடிப்பேன்'' - திருநாவுகரசர் எம்.பி பரபரப்பு பேட்டி!
Thirunavukarasar MP speech
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. திருநாவுக்கரசரிடம், தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வந்தால் பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சேர்வார்கள் என பா.ஜ.கவினர் சொல்கிறார்கள்.
அந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவில் இணைய போவதாக உங்களது பெயர் சொல்கிறார்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு திருநாவுக்கரசர், அப்படி சொல்பவர்களை செருப்பாலே அடிப்பேன். இனிமேல் சீமான் போல பேசலாம் என்று முடிவெடுத்து விட்டேன் என பதில் அளித்துள்ளார்.
மேலும் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வரும்போது எல்லாம் மறைந்த தலைவர்களை பாராட்டி பேசுகிறார். அதிலும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் அவர்களை பாராட்டி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், அ.தி.மு.கவை பா.ஜ.க கூட்டணிக்குள் இழுப்பதற்காகவும், அ.தி.மு.க வாக்கு வங்கியை தன் பக்கம் இழுப்பதற்கும் பிரதமர் பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.
English Summary
Thirunavukarasar MP speech