17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
There is a chance of heavy rain in 17 districts today
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் வளிமண்டல மேலடுக்கு நாளை உருவாகும் இதன்காரணமாக நாளை மறுநாள் அதே பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .
இதேபோல சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில், கேரள பகுதிகளில் வருகிற 27-ந்தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு, தமிழக பகுதிகளில் மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
There is a chance of heavy rain in 17 districts today