தேனி | சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்! ஆத்திரத்தில் பெற்றோர்கள் எடுத்த அதிரடி முடிவு! - Seithipunal
Seithipunal


ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்:

தேனி மாவட்டம்: ஆண்டிபட்டி அருகே உள்ள அனுப்பம்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 68). இவர் ஒரு கூலித் தொழிலாளி. 

இவர் அதே பகுதியைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவியை பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். 

அவரது தொல்லை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலுச்சாமி மாணவியிடம் வலுக்கட்டாயமாக தகாத முறையில் ஈடுபட்ட முயன்றுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்திருந்தார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் ஆத்திரமடைந்து, ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் போலீசார், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வேலுச்சாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni girl sexually harassed old man


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->