டாஸ்மாக் உட்பட 10 கடைகளில் கொள்ளை.. சென்னை மக்களுக்கு ஷாக்.!!
Theft in 10 shops including tasmac in Chennai
சென்னையில் டாஸ்மாக் கடை உட்பட அடுத்தடுத்து 10 கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள மளிகை கடை, பொம்மை கடை, மற்றும் அரசு மதுபான கடை என பத்து கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ரூ.10,000 பணம் மற்றும் பொருட்கள் திருடு போயள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று அரசு மதுபான கடையிலிருந்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களும் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் தலைநகர் சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Theft in 10 shops including tasmac in Chennai