அபராதம் விதித்ததால் ஆத்திரம்.! போலீஸ் ஏட்டுவை அறிவாளால் வெட்டிய வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதித்த போலீஸ் ஏட்டுவை அறிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நேற்று மாலை வழக்கமாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த பெருமாள் பட்டியை சேர்ந்த காளிராஜ் (26) என்பவர் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளார்.

இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக காளிராஜுக்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஏட்டு தமிழ்ச்செல்வன், அபராதம் விதித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காளிராஜ் அறிவாளை எடுத்து ஏட்டு தமிழ்ச்செல்வன் கழுத்தில் வெட்ட முயன்றார்.

அப்பொழுது தமிழ்ச்செல்வன் தடுக்க முயற்சித்த போது கையில் அருவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து அங்கிருந்து காளிராஜ் தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் காயமடைந்த தமிழ்ச்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார், அறிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய காளிராஜை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The youth who cut the police constable was arrested in thenkasi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->