நடுவழியில் திடீரென கழன்று ஓடிய தனியார் பள்ளி பேருந்தின் சக்கரம்.. 15 மேற்பட்ட மாணவர்கள் காயம்..! - Seithipunal
Seithipunal


பள்ளி பேருந்தின் சக்கரம் கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின்  பேருந்து ஒன்று பொண்ணாபுரம் பகுதியை நோக்கி  வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வேனின் டயர் கழன்று ஓடியது.

இதில், வேனில் பயணித்த 15 மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இது சம்மந்தமான வீடியோக்கள் இணையத்தளத்தில் வெளியாகி வருகின்றன. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி மாணவ மாணவிகளை கொண்டு செல்லும் பள்ளி பேருந்துகள் தரம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பள்ளி பேருந்துகளை உரிய முறையில் பராமரித்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The wheel of a private school bus that suddenly fell off in the middle


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->