தீப்பற்றி எரியும் ரசாயன கப்பல் கடலில் மூழ்கும் நிலை; தமிழக கடற்பகுதிக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்..!
The risk of damage to the Tamil Nadu sea area if the burning chemical ship sinks into the sea
இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இருந்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு 'வாங் ஹை 506' என்ற சரக்கு கப்பல், கேரள மாநிலம், கோழிக்கோடு வேப்பூர் துறைமுகத்திற்கும், கண்ணுார் அழிக்கல் துறைமுகத்திற்கும் இடையே கடல் பகுதியில் சென்றபோது திடீரென தீ பிடித்துள்ளது.
150-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன் சென்ற கப்பலில் இருந்து சில கன்டெய்னர்கள் வெடித்து சிதறியுள்ளன. இரு நாட்களாக எரியும் இந்த சரக்கு கப்பலில் இருக்கும் ஏனைய 140 கன்டெய்னர்களில், உராய்வால் தீப்பிடிக்கும் ரசாயனங்கள், காற்றில் கலந்தால் தீப்பிடிக்கும் ரசாயனங்கள், மண்ணெண்ணெய், பெயின்ட் ஆகியன உள்ளன. இதனால், தீயை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக கடலோர காவல் படைக்கு சொந்தமான இரு கப்பல்கள், நேற்று முதல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் கப்பலுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அத்துடன் மேலும் மூன்று கப்பல்களும் தஹியை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், இரு நாட்களாக தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால் கப்பல் கடலுக்குள் சரியத் தொடங்கியுள்ளது. இதனால் கப்பல் வெடித்து கடலுக்குள் மூழ்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இந்த கப்பலில் 2,000 டன் எரிபொருள் மற்றும் 240 டன் டீசல் உள்ளன. எரிந்து கொண்டிருக்கும் கப்பல் கடலுக்குள் மூழ்கினால், கடலின் சூழல் பெரும் பாதிப்பை சந்திப்பதோடு, கடலில் ரசாயனம், டீசல் கலக்கும் பட்சத்தில் தமிழக கடல் பகுதியிலும் பரவ வாய்ப்புள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்படைக்கு சொந்தமான கப்பல் மற்றும் ஹெலிகாப்டர்கள் அந்தப் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
English Summary
The risk of damage to the Tamil Nadu sea area if the burning chemical ship sinks into the sea