வெப்பத்தை தணித்து சென்னையை குளிர்வித்த மழை..! - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது.

கோடை காலம் தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் நிலவும் சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று லேசான மழை பெய்துள்ளது. இதில் எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் சுட்டெரித்த கோடை வெயில் சற்று தணிந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The rain cooled down the heat and cooled down Chennai


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->