இப்படி ஒரு பிரதமரை பெற்றதற்கு இந்திய மக்கள் பெருமைப்பட வேண்டும்..செல்லூர் ராஜு புகழாரம்!
The people of India should be proud to have a Prime Minister like thisSellur Rajus praise
இரண்டு நாட்கள் தூங்காமல் கண்விழித்து ராணுவ வீரர்களின் நடவடிக்கைகளை பிரதமர் மோடி கண்காணித்து வருகிறார். இப்படி ஒரு பிரதமரை பெற்றதற்கு இந்திய மக்கள் பெருமைப்பட வேண்டும் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வினர் பிரதமர் மோடிக்குதான் நன்றி தெரிவிக்க வேண்டும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;-பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட வயதான தலைவர்களின் அனுபவத்தை பயன்படுத்தி, பிரதமர் மோடி அற்புதமான பணியை செய்து வருகிறார்.ஒவ்வொரு இந்தியனும் பாரத பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டும்,
இரண்டு நாட்கள் தூங்காமல் கண்விழித்து ராணுவ வீரர்களின் நடவடிக்கைகளை பிரதமர் மோடி கண்காணித்து வருகிறார். இப்படி ஒரு பிரதமரை பெற்றதற்கு இந்திய மக்கள் பெருமைப்பட வேண்டும். எனவே தி.மு.க.வினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். பாதுகாப்புத்துறை மந்திரி, உள்துறை மந்திரி ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்தார்.
English Summary
The people of India should be proud to have a Prime Minister like thisSellur Rajus praise