ஏரியில் பிணமாக மிதந்த பெயிண்டர்.! கொலையா? தற்கொலையா? - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் ஏரியில் பிணமாக மிதந்த பெயிண்டர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளரி வெள்ளி பகுதியில் உள்ள ஏரியில் நேற்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்துள்ளது. இதைப் பார்த்து அப்பகுதியாக சென்றவர்கள் இதுகுறித்து பூலாம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், ஏரியில் மிதந்த ஆண் பிணத்தை மீட்டனர். இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பிணமாக மிதந்தவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெயிண்டர் சரவணன் (45) என்பது, இவர் கடந்த 30ஆம் தேதி வெள்ளரிவெள்ளி பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்ததும் தெரிய வந்தது.

மேலும் சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சரவணன், ஏரியில் மூழ்கி தற்கொலை இருந்தாரா? அல்லது யாராவது கொலை செய்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The painter who floated dead in the lake in salem


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->