அவதூறு  கார்ட்டூன் வெளியிட்ட விவகாரம்..திமுகவை கண்டித்து அதிமுக போராட்டம்!  - Seithipunal
Seithipunal


ஆணித்ரமான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க திராணியற்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தனது கட்சியினரை வைத்து கீழ்தரமான முறையில் எங்களது கழக பொதுச்செயலாளரை பற்றி அவதூறான கார்ட்டூன்களை வெளியிட்டு அற்ப அரசியல் செய்கிறார்  புதுச்சேரி அதிமுக மாநில கழக செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர்,புரட்சித்தமிழர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்களைதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் அவதூராக சித்தரித்து அரை நிர்வாணமாக கார்ட்டூன் படம் வரைந்து மிகவும் மோசமான வகையில் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளதை கண்டித்தும்,திமுகவின் சமூக வலைதள பக்கங்களை உடனே முடக்கம் செய்ய வலியுறுத்தியும்,திமுக அரசை குறைந்தபட்சம் ஆறு மாதத்திற்கு ஆவது இந்திய தேர்தல் ஆணையம் முடக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பழைய பேருந்து நிலையம் பேரறிஞர் அண்ணா சிலை  அருகில் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் தலைமையில்   மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம்,  மாநில அம்மா பேரவை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், அன்பழகன் பேசியதாவது:பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திராவிட முன்னேற்ற கழக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி கண்ட அரசாக உள்ளது. அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாது, தங்கு தடையின்றி போதை பொருள் விற்பனை, பாலியல் வன்முறைகள், கொலை கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் மக்கள் பயம் கலந்த பீதியுடன் வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தவறுகளை ஆதாரப்பூர்வமாக எங்களது கழகத்தின் பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் மக்களிடம் தினந்தோறும் எடுத்துரைத்து வருகிறார். அவருடைய ஆணித்ரமான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க திராணியற்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தனது கட்சியினரை வைத்து கீழ்தரமான முறையில் எங்களது கழக பொதுச்செயலாளரை பற்றி அவதூறான கார்ட்டூன்களை வெளியிட்டு அற்ப அரசியல் செய்கிறார்.

            இதுபோன்ற வக்கிரத்தனமான வெளியீடகள் என்பது ஸ்டாலின் அவர்களின் வக்கிர புத்திக்கு எடுத்துக்காட்டாகும்.  ஜனநாயகத்தில் விமர்சனங்களை எதிர்கொள்ள திராணியற்ற திமுக முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகள் சட்டத்திற்கு விரோதமான ஒன்றாகும்.

            சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இச்சூழ்நிலையில் அதிமுக தலைமையில் பாஜகவுடன் கூட்டணி அமைந்ததில் இருந்து ஸ்டாலின் அவர்கள் தோல்வி பயத்தில் தான் என்ன செய்கிறோம் என்று கூட புரிதல் இல்லாமல் செய்கிறார். ஒருபுரம் ஒட்டுமொத்த மக்கள் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டுள்ள திமுக தனது கூட்டணி கட்சிகளால் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகிறது. தேர்தல் நேரம் நெருங்க நெருங்க கூட்டணி கட்சிகள் மூலம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறப்போவதாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். இவற்றையெல்லாம் தாங்கிகொள்ள முடியாமல் ஸ்டாலின் அவர்கள் எங்களது கழக பொதுச்செயலாளரை பற்றி தவறாக தனது கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மூலம் அநாகரிகமாக சித்தரித்து வருகின்றனர்.

            டாஸ்மாக் நிர்வாகத்தில் அமலாக்கப்பிரிவு உரிய நடவடிக்கை எடுத்தவுடன் டெல்லிக்கு வெட்கமே இல்லாமல் சென்று நம் நாட்ட பிரதமரை சந்தித்து காலில் விழுந்து டாஸ்மாக் பிரச்சனைகளில் இருந்து தானும் தனது குடும்பத்தினரையும் விடுவித்ததை மறந்துவிட்டு எங்களது கழக பொதுச்செயலாளரை தரம் தாழ்ந்து சித்தரித்துள்ளார். திமுகவை எதிர்ப்பவர்களை திமுக அரசு காவல்துறையினர்களை ஏவி விட்டு அடக்கு முறையை கையாண்டு வருகின்றனர். ஆனால் அந்த திமுகவினரே மற்ற கட்சிகளை அவதூறாக சித்தரித்து வருவது எந்த விதத்தில் நியாயம்.

            இத சம்பந்தமாக திமுகவின் அதிகாரப்பூர்வமான தகவல் தொழில்நுட்ப பிரிவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்றைய தினம் புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் புதுச்சேரி காவல்துறை துணை தலைவரிடம் புகார் மனு அளித்திருந்தோம். அந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அரசியலில் அநாகரீகமாகவும், கீழ்தரமாகவும், வக்கிரபுத்தியுடனும் செயல்படும் திமுகவையும் அதன் கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு மேலும் திமுக தன்னை திருத்திக்கொள்ளவில்லை என்றால் புதுச்சேரி அதிமுக சார்பில் தக்க பதிலடியை கொடுப்போம். 
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ ராஜாராமன்,மாநில இணைச் செயலாளர் எஸ். வீரம்மாள், மாநில கழக பொருளாளர் ரவிபாண்டுரங்கன்,புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார்,மாநில துணைச் செயலாளர்கள் டி.குணசேகரன்,  டி. குணசேகரன், பி.எல். கணேசன், எம். நாகமணி, எஸ் கிருஷ்ணமூர்த்தி, ஏ.,காந்தி, பி. குமுதன்,  ஜெய.சேரன் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எம். மருதமலையப்பன் ,மாநில மகளிர் அணி செயலாளர் பி.விமலாஶ்ரீ, .உட்பட கழகத்தினர் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The issue of the defamation cartoon released ADMK protest against DMK


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->