₹4 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரத்தை கோவில் உண்டியலில் போட்ட கணவன்! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தன்னுடைய ரூ. 4 கோடி மதிப்புடைய நில பத்திரத்தை கோவில் உண்டியலில் போட்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ,படவேடு பகுதியை சேர்ந்த விஜயன் (வயது 65), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவரது மனைவி கஸ்தூரி, கண்ணமங்கலம் அருகே உள்ள அரசு பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

விஜயனுக்கும் கஸ்தூரிக்கும் இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி, தனித் தனியாக வசித்து வருகின்றனர். சமீபமாக தம்பதிகளுக்கு  இடையே ஏற்பட்ட தகராறால், இருவரும் தனித்தனியாக வாழ்ந்துவரும் நிலையில், விஜயன் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.

இந்தநிலையில் மே 2-ஆம் தேதி, படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு விஜயன் வந்தார். சாமி தரிசனம் முடிந்த பிறகு, கையில் வைத்திருந்த ரூ.4 கோடி மதிப்புடைய நிலத்தின் பத்திரத்தை கோவிலின் உண்டியலில் போட்டுவிட்டு சென்றார்.

இதையடுத்து இன்று கோவிலில் உண்டியல் எண்ணும் பணிக்கு வந்திருந்த விஜயன், உண்டியலில் பத்திரம் இருப்பதாகவும், அதை முறையாக கோவிலுக்கு மாற்றி வழங்கப் போவதாகவும் தெரிவித்தார். இதை கேட்ட கோவில் ஊழியர்களும், பக்தர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் இந்த தகவல் அவரது மனைவி மற்றும் மகள்களிடம் சென்றது. அப்போது அவர்கள் உடனடியாக கோவிலுக்கு வந்து, “சொத்து எங்களுக்குச் சொந்தமானது. எங்களது அனுமதி இல்லாமல் அதை எப்படி எழுதி தர முடியும்?” என்று கேட்டு கதறி அழுதனர்.இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The husband who placed a property deed worth ₹4 crores in the temple donation box


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->