நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு விசாரணை..! - Seithipunal
Seithipunal


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தாக்கத்தால் செய்தது. குறித்த மனுமீதான விசாரணையை நாளைக்கு (டிசம்பர் 16) உச்ச நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம ரவிகுமார் என்பவர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்து இருந்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றாததால், ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை. பிற மனுதாரர்கள் உட்பட, 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர்நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன்'என்று உத்தரவிட்டார். அதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு இன்று மீண்டும் 02-வது நாளாக உய்ரநீதிமன்ற மதுரைக்கிளை இரு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் தரப்பில் இருந்து, 'இது கார்த்திகை தீபத்தூண் அல்ல. சமணர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட தூண். இரவில் அதில் விளக்கேற்றி வெளிச்சத்தில் விவாதிப்பார்கள். இது போன்ற தூண் அமைப்பு மதுரை மாவட்டத்தில் சில மலைகளில் உள்ளன' என முன்வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, தர்கா தரப்பிலிருந்து, ''தனி நீதிபதி தங்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கவில்லை. தர்கா நிர்வாகம் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளதாக தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டது ஏற்புடையதல்ல'' என வாதிட்டப்பட்டது.

தர்கா தரப்பு, தர்கா ஆதரவு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர். மேலும், நாளைக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The hearing of the Thiruparankundram lamp post case has been postponed to tomorrow


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->