அரியலூரில் பரபரப்பு...! தாத்தாவை அடித்துக்கொன்ற பாசக்கார பேரன்...! போலீசார் வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் சொத்து தகராறில் தாத்தாவை பேரன் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் அயன் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சின்னப்பிள்ளை (86). இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேருக்கும் திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடும்பத்தில் தந்தை சின்னப்பிள்ளை பெயரில் உள்ள சொத்துக்களை பிரித்து தரக் கோரி அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதில் மூத்த மகனின் மகனான இளவரசன் (30) சம்பவத்தன்று தாத்தாவிடம் சொத்து தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த இளவரசன் தாத்தாவை கீழே தள்ளி கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் சின்னப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த சின்னப்பிள்ளையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தாத்தாவை கொலை செய்ததுவிட்டு தலைமறைவான இளவரசனை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The grandson who beat his grandfather to death in Ariyalur


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->