தாயை கொலை செய்ய காதலனை அழைத்து வந்த காதலி..கடைசியில் நடத்த அதிர்ச்சி!   - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவர், தன் காதலுக்கு தடையாக இருந்த தாயை கொலை செய்ய தனது காதலனை அழைத்து வந்து கொலை செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஜுடி மெட்லா ஷிபூர் பகுதியில், 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவருக்கும் , நலகொண்டாவைச் சேர்ந்த டி.ஜே.மாஸ்டர் சிவா (19) என்பவருடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக நட்பு ஏற்பட்டு காதலாக வளர்ந்தது. இதை எதிர்த்து, தாய் அஞ்சலி (39) காதலை முடிக்க மகளிடம் வற்புறுத்தி வந்தார். தொடர்ந்து ஏற்பட்ட தகராறுகளில், மாணவி தாயை கொலை செய்ய திட்டமிட்டார்.

மாணவி, சிவாவிடம் தாயை கொலை செய்ய வேண்டுமென கூற, முதலில் அவர் மறுத்தார். ஆனால் தொடர்ந்து மிரட்டியதால், சிவா அவரது 17 வயது சகோதரருடன் அஞ்சலியின் வீட்டுக்கு சென்றார்.

மாணவி வீட்டில் பாதுகாப்பாகக் காவலாக நின்று, காதலனை உள்ளே அனுப்பினார். அப்போது தாய் அஞ்சலியை கயிறால் கழுத்தை இறுக்கி, கீழே விழுந்ததையடுத்து, இருவரும் சேர்ந்து பலத்த காயம் ஏற்படும்படி தாக்கினர். இதனால் அஞ்சலி உயிரிழந்தார்.

முதல் முயற்சிக்குப் பிறகு அஞ்சலி உயிருடன் இருப்பதை அறிந்த மாணவி, மீண்டும் சிவாவை அழைத்து, “வந்து கொலை செய்துவிட்டு போ” என கூறினார். இரண்டாவது முறையாக வீட்டுக்குள் சென்ற சிவா, இறுதி முறையாக கழுத்தை இறுக்கினார்.

பின்னர் மாணவி, உறவினர்களிடம் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறினார். ஆனால் போலீசாரின் சிக்கலான விசாரணையில், மாணவி கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மாணவி, அவரது காதலன் சிவா மற்றும் சிவாவின் சகோதரர் ஆகிய மூவரும் கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூவெனைல் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The girlfriend who brought her lover to kill her mother shocked in the end


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->