கள்ளக்காதல் விவகாரம்.! விவசாயியை கொன்று தலைமறைவான நண்பர் கைது.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயியை கொன்று தலைமறைவாக இருந்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் எஸ்.புதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராஜசேகர்(47). இவரது மனைவி விஜயலட்சுமி(38). இந்நிலையில் ராஜசேகரின் நண்பரான மோகன் என்பவர் அடிக்கடி ராஜசேகர் வீட்டுக்கு வந்து சென்றபோது, அவரது மனைவி விஜயலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனால் ராஜலட்சுமியும், மோகனும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்ய முடிவு செய்தனர். இதன்படி இருவரும் சேர்ந்து கடந்த வருடம் ராஜசேகரை அடித்துக்கொன்று வீட்டின் பின்புறம் உள்ள வாழை தோப்பில் புதைத்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து நடுவீரப்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற விஜயலட்சுமியை போலீசார் கைது செய்தனர். இதையறிந்த மோகன் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் மோகன் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மோகன் நெய்வேலி பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மோகனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The friend who murder the farmer and absconded was arrested in Cuddalore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->