மதுபோதையில் தகராறு.! நண்பனை கத்தியால் குத்திய மீனவர்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கத்தியால் குத்திய மீனவரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருதுநகர் பச்சியாங்குப்பம் கிழக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் மீனவர் வெற்றிவேல் (47). இவரும், அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான முருகன்(49) என்பவரும் நேற்று துக்க நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து மது போதையில் இருந்த இருவருடயே, மேலும் மது குடிப்பதற்கு யார் மது வாங்கி தருவது என்பது குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் இருவருடைய தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த வெற்றிவேல் முருகனை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த முருகன் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கத்தியால் குத்திய வெற்றிவேலை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The fisherman who stabbed his friend in Cuddalore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->