போடியில் நாளை மறுநாள்  திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்..! - Seithipunal
Seithipunal


போடியில் உள்ள நகர செயலாளர் அலுவலகத்தில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கி பேசினார். 

மேலும், நகர செயலாளர் புருஷோத்தமன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பன், நகர்மன்ற கவுன்சிலர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமாகிய மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இளைஞரணி செயலாளரின் வழிகாட்டுதலின்படி போடி பாஸ்கரா திருமண மண்டபத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த பாசறைக் கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்குகிறார். நகர செயலாளர் புருஷோத்தமன், நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அவைத்தலைவர் சின்னத்துரை வரவேற்பு அளிக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேச உள்ளார். எனவே இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர்  கலந்துகொள்ள வேண்டும் என்று தங்கதமிழ்செல்வன் கேட்டுக்கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The day after tomorrow Dravida model training class meeting in Bodi ..!


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->