வாலிபரை கொன்று புதைத்த வழக்கு..3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
The case of murdering and burying the youth Courts sensational verdict sentencing 3 people to life imprisonment
திருச்செந்தூர் அருகே கடந்த 2014ம் ஆண்டு வாலிபர் ஒருவரை கொலை செய்து புதைத்த வழக்கில் குற்றவாளி 3 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 22.5.2014 ஆண்டு திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த அமலன் மகன் பிரபு என்பவரை அமலிநகர் மையவாடியில் வைத்து மூன்று நபர்கள் கொலை செய்து புதைத்தனர்.இந்த கொலை சம்மந்தமான வழக்கில் அமலிநகர் பகுதியைச் சேர்ந்தவர்களான டெரன்ஸ், பிரக்சின் ஷியாஷ்டன் மற்றும் இருதய அந்தோணி சிரியல் ஆகியோரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன் டெரன்ஸ், ஷியாஷ்டன், இருதய அந்தோணி சிரியல் ஆகியோருக்கு தலா ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.மூன்றுபேருக்கும் தலா ஆயுள் தண்டனை வழங்கப்படாதல் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு பரணி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் பாராட்டினார்.
English Summary
The case of murdering and burying the youth Courts sensational verdict sentencing 3 people to life imprisonment