கார் கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று இரவு கோவை மாவட்டம் காளப்பட்டி குரும்பபாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தறிக்கட்டு ஓடியது.

இதில் சாலையோரம் சென்று கொண்டிருந்த பெண்கள் மீது மோதி, பின்பு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The car overturned in the ditch and the accident occurred in kovai


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->