கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 3 பெண்கள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


உளுந்தூர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏஜாஸ் (28). இவரது மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால், குழந்தையும், மனைவியையும் பார்ப்பதற்காக ஏஜாஸ், இவரது தாய் சமீம்(50), தங்கை அம்ரின்(22) மற்றும் உறவினர்களான சுபேதா(21) மற்றும் நசீம்(45) ஆகியோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சேலம் சென்றுள்ளனர்.

பின்பு சேலத்தில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது அதிகாலை 3 மணி அளவில் உளுந்தூர்பேட்டை புறவழி சாலை அருகே வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சமீம், அம்ரின், சுவேதா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் காயமடைந்த ஏஜாஸ் மற்றும் நசீம் ஆகிய இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து, போலீசார் விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழங்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The car overturned in the ditch and the accident in ulundurpet


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->