கிணற்றில் தவறி விழுந்த அண்ணன்-தம்பி.! நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு.!
The brothers died after falling into the well in kallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த அண்ணன், தம்பி இருவரும் நீரிலும் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரமகுண்டம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருக்கு தமிழ்மாறன் (10), மோகனபிரியன் (9) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள நர்சரி பள்ளியில் படித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை இவர்கள் இரண்டு பேரும் காலைக்கடன் கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள தரை கிணற்றின் ஓரம் சென்றுள்ளனர். அப்பொழுது திடீரென இரண்டு பேரும் தவறி கிணற்றில் விழுந்துள்ளனர்.
இதையடுத்து இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், கிணற்றில் விழுந்த 2 சிறுவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இரண்டு பேரும் தண்ணீரில் மூழ்கியதால் இது குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கிய இரண்டு சிறுவர்களையும் பிணமாக மீட்டனர்.
இதையடுத்து போலீசார் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
The brothers died after falling into the well in kallakurichi