கிணற்றில் குளிக்க சென்ற சிறுவனுக்கு நிகழ்ந்த விபரீதம்.. திருப்பூர் அருகே நிகழ்ந்த சோகம்..!
The boy who went to bathe in the well was killed
கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆதி பாஷா. எனக்கு திருமணமாகி சல்மான் அகமது என்ற மகன் உள்ளான் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் அருகிலிருந்த கிணற்றில் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் கூறியுள்ளார். நீச்சல் தெரியாததால் மேலே வர முடியாமல் திணறி உள்ளார். இதனை கண்ட அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர் ஆனால் அவர்களாலும் காப்பாற்ற முடியவில்லை இது குறித்து உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்துவந்த தீயணைப்பு துறையினரும் காவல்துறையினரும் அகமதுவை கிணற்றில் இறங்கி தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின் அவரின் சடலத்தை இன்று அதிகாலை தீயணைப்புத் துறையினர் கண்டெடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
The boy who went to bathe in the well was killed