கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்..!! 20 மணி நேரம் கழித்து சடலமாக மீட்பு..!! சோகத்தில் மூழ்கிய கிராமம்..!! - Seithipunal
Seithipunal


கிணற்றில் குளிக்க சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்துள்ள விஸ்வநத்தம் கம்மவார் காலணியில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளான்.

இந்நிலையில், இவரின் மகன் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளான். அப்போது அவர் எதிர்பாரத விதமாக கிணற்றில் விழுந்துள்ளார்.

இது குறித்து உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அவனை மீட்கும் பணியில் ஈடுப்படனர்.

20 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுவனின் சடலத்தை தீயணைப்பு துறை மீட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி  மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The boy fell into the well and died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->