குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்..!! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!! - Seithipunal
Seithipunal


குளிக்க சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் பகுதியில் தஞ்சையை சேர்ந்த முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்த பகுதியில் அவர் சொந்தமாக துரித உணவுகடை நடத்தி வருகிறார்.

இவருக்கு பிரகதீஸ்வரன் என்ற 13 வயது மகன் இருக்கிறான். இந்த நிலையில், அவன் குளிப்பதற்காக குளத்தூரில் உள்ள பெரிய குளத்திற்கு சென்றுள்ளான். அப்போது குளத்தின் ஆழம் தெரியாமல் சிறுவன் நீரில் இறங்கியதால் மூழ்கியுள்ளான்.

இதனைக்கண்ட அக்கம்பக்கதினர் உடனே அவனை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் குளத்தில் நீர் அதிகம் இருந்ததால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் நீர் அதிகமாக இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The boy drowned in the pool


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->