விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்.! வேன் மோதி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் வேன் மோதி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் பரவை சத்தியமூர்த்திநகரில் உள்ள கள்ளிக்குடி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பெயிண்டர் செந்தில்குமார். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களது மகன் பொன்ராம் (3). 

இந்நிலையில் இன்று காலை சிறுவன் பொன்ராம் வீட்டின் முன்பு சாலையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக மில் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் எதிர்பாராதவிதமாக திடீரென சிறுவன் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் வளர்த்த காயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சமயநல்லூர் போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The boy died after hit by a van in madurai


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->