ஆடுமேய்க்க சென்ற முதியவர் சடலமாக மீட்பு.. காவல்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


ஆடு மேய்க சென்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் , சித்தாண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன் (65). விவசாயியான இவர் தனது வீட்டில் ஆடு மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் அருகே உள்ள வனப்பகுதியின் அருகே அவரது விளைநிலத்தில் கால்நடைகளை மேய்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவதன்று வனபகுதியில் ஆடுகளை மேய்க்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வராததால்சந்தேகமடைந்த குடும்பத்தினர் வனப்பகுதிக்கு சென்றனர். அப்போது அவர் இறந்து கிடந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The body of an old man who went to graze was recovered


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->