நகைக்காக கொலை.. இறுதி சடங்கில் நீலிக்கண்ணீர் நாடகம்.. அதிர்ச்சி திருப்பமாக அம்பலமான உண்மை.! - Seithipunal
Seithipunal


நகைக்காக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த பணிப்பெண், இறுதி சடங்கில் அழுது புரண்டு ஆடிய கபடநாடகம் இறுதியில் அம்பலமானது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை முத்தமிழ் நகர் சேக்கிழார் தெரு பகுதியை சார்ந்தவர் ஜாக்குலின் மேரி (வயது 65). இவரது கணவர் கடந்த சில வாரத்திற்கு முன்னதாக உயிரிழந்த நிலையில், தனது மகனுடன் வசித்து வருகிறார். ஜாக்குலின் மேரியின் மகன் பிராங்க்ளின் இரயில்வேயில் பயண டிக்கெட் பரிசோதனை (TTR) அதிகாரியாக பயணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி பணிக்காக பிராங்க்ளின் மதுரைக்கு சென்றுவிட, வீட்டில் வேலைக்கார பெண்ணுடன் ஜாக்குலின் மேரி தனியாக இருந்துள்ளார். கடந்த 16 ஆம் தேதி தாயாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிராங்க்ளின், வீட்டில் யாரும் அலைபேசியை எடுக்காததால் வீட்டின் மாடியில் குடியிருந்தவர்களுக்கு தொடர்பு கொண்டு அம்மாவை பார்க்குமாறு தெரிவித்துள்ளார். 

வீட்டிற்கு சென்று அவர்கள் பார்க்கையில் ஜாக்குலின் மேரி நாற்காலியில் பிணமாக இருந்துள்ளார். இதனையடுத்து, தகவல் பிரங்களினுக்கு தெரிவிக்கப்படவே, தாயாருக்கு காக்கா வலிப்பு நோய் இருப்பதால் அவர் காக்கா வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், இதனை மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், பிராங்க்ளின் தனது தாயார் அணிந்திருந்த நகை மற்றும் வளையலை காணவில்லை என்றும், தனது தாயாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், உடனடியாக மேரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் ஜாக்லின் மேரி கொலை செய்யப்பட்டது உறுதியாகவே, காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணையில், வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த ஆரோக்கிய டென்சி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். காவல் துறையினரின் தீவிர விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளது. 

இது தொடர்பான ஆரோக்கிய டென்சியின் வாக்குமூலத்தில், " ஜாக்லின் அணிந்திருந்த ஐந்தரை பவுன் நகைகளை நான் கொள்ளையடித்தேன். இதனை அவர் பார்த்துவிட்டதால் அவரை கொலை செய்து, அவரது அலைபேசியை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு, எதுவும் தெரியாது போல நாற்காலியில் அவரை உட்கார வைத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன் " என்று தெரிவித்துள்ளார். 

ஜாக்லினை கொலை செய்த ஆரோக்கிய டென்சி ஜாக்லினின் இறுதி சடங்கில் எதுவும் தெரியதுபோல கதறியழுது, கபட நாடகம் ஆடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Woman Murder Case Mystery Revokes by Police Investigation 19 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->