92 வயதிலும் பேரனுக்கு உழைத்துப்போட்ட மூதாட்டி.. குடிகார பேரன் செய்த பதறவைக்கும் செயல்.!
Thanjavur Grand Ma Murder by Grand Son 8 Oct 2021
தன்னை வளர்த்த சொந்த பாட்டியை குடிகாரன் உயிருடன் எரித்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி செங்கமங்கலம் பகுதியை சார்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களின் மகன் அஜித் குமார் (வயது 32). பழனிவேல் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்ட நிலையில், தனலட்சுமியின் பராமரிப்பில் அஜித்குமார் வளர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனலட்சுமியும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட, அவரது தாயார் செல்லம்மாள் கூலி வேலைக்கு சென்று பேரனை கவனித்து வந்துள்ளார். இத்தனை துயரங்களில் வளரும் அஜித் குமாரோ, மதுபழக்கத்தை கையில் எடுத்ததாக தெரியவருகிறது. மேலும், தகாத உறவு பழக்கத்திலும் இருந்துள்ளார்.
வேலைக்கு செல்லாமல் பாட்டியின் உழைப்பில் வளர்ந்து வந்த அஜித்குமார், தினமும் மதுபானம் அருந்திவிட்டு உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், 92 வயதாகும் மூதாட்டி செல்லம்மாள் உடல்நலக்குறைவால் கடந்த 3 நாட்களாக படுத்த படுக்கையாகி இருக்கிறார்.
இதனால் வீட்டில் சமையல் செய்யவும், உணவு வழங்கவும் ஆட்கள் இல்லாமல் இருந்த நிலையில், அஜித் குமார் வீட்டில் இருந்த அரிசியை சாப்பிட்டு, தண்ணீர் குடித்து உயிர் வாழ்ந்துள்ளார். தன்னை பல வருடமாக வளர்த்து வந்த மூதாட்டி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற உணர் கூட இல்லாமல் அஜித் குமார் இருந்துள்ளான்.
சாப்பிடாமல் இருந்ததால் ஆத்திரமூட்டு மூதாட்டியை வீட்டு வாசலில் உயிரோடு தீ வைத்து கொளுத்தி இருக்கிறான். மேலும், வீட்டில் இருந்த நாய், குட்டியையும் வீட்டில் பூட்டி வைத்து வீட்டோடு தீ வைத்து கொளுத்தியுள்ளான்.
மறுநாள் காலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மூதாட்டி எரிந்த நிலையில் இருப்பதாய் கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அஜித் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thanjavur Grand Ma Murder by Grand Son 8 Oct 2021