தஞ்சாவூர் பட்டாசு குடோன் வெடி விபத்தில் இருவர் பலி! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நெய்வேலி தென்பாதி கிராமத்தில் இன்று (மே 18) அதிகாலை நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

அனுமதியில்லாமல் பட்டாசுகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கப்பட்டிருந்த ஒரு கிடங்கில் சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது. இந்த சத்தம் அருகிலுள்ள கிராமங்களில் வரை கேட்கப்பட்டது.

இந்த விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராசு (60) மற்றும் ரியாஸ் (18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக தகவல் பெறும் வண்ணம், வட்டாத்திகோட்டை போலீசார், ஒரத்தநாடு டிஎஸ்பி, திருவோணம் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தொடர்ந்து, மாவட்ட தீயணைப்பு குழு, தீயை அணைத்து இருவரின் உடலையும் மீட்டது. பிரேத பரிசோதனைக்காக உடல்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thanjavur Crackers Factory Accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->