கணவன்-மனைவி குழந்தைகளாக வாழ்ந்த வரம்.. இறப்பிலும் இணைபிரியாத அன்பு உள்ளங்கள்.. தஞ்சையில் நெகிழ்ச்சி சோகம்.!! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு பாவசாமி அக்ரகாரம் பகுதியை சார்ந்தவர் சுப்புராவ் (வயது 92). இவர் சென்னையில் உள்ள பிரசிடன்சி கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி ஹேமா (வயது 88). இருவருக்கும் குழந்தைகள் இல்லை என்பதால், பாசத்தால் குழந்தைகளாக இணைபிரியாது வாழ்ந்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த 3 வருடமாக திருவையாறு தியாகராஜர் காலனியில் தனது உறவினரின் இல்லத்தில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை நேரத்தில் ஹேமா திடீரென இயற்கையை எய்தியுள்ளார். மேலும், மனைவி இறந்த செய்தியை அறிந்த சுப்புராவ் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். தனக்கு ஆதரவாக இருந்த ஒரேயொரு ஜீவனும் இன்று இல்லையே என்று வருந்தியுள்ளார். 

சரியாக மனைவி இறந்த சோக செய்தியை அறிந்து ஒன்றரை மணிநேரத்திற்கு உள்ளாகவே, சுப்புராவும் இயற்கையை எய்தியுள்ளார். மேலும், இணைபிரியாத தம்பதியாக வாழ்ந்து வந்த ஜோடிகள், மரணத்திலும் இணைபிரியாது இருந்துள்ளனர். இவர்கள் இருவரின் உடலும் ஒரே வண்டியில் சுடுகாட்டிற்க்கு எடுத்து செல்லப்பட்டு, இறுதி மரியாதையை செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur couple died Naturally


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->