மதுரை: சாக்கு குடோனில் பயங்கர தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் சாக்கு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமகியுள்ளன.

மதுரை மாவட்டம் நில்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (46). இவர் அதே பகுதியில் சாக்கு வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு குடோனை பூட்டிவிட்டு சிவபாலன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து இரவு 12 மணியளவில் குடோனிலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது.

இதைப் பார்த்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், குடோனில் பற்றி அறிந்த தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் தீயானது குடோன் முழுவதும் பரவியதால், மேலும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனே. இதைத்தொடர்ந்து சுமார் 4 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் குடோனில் இருந்த ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான சாக்கு, நோட்டு, டைரி ஆகியவை எரிந்து நாசமாகின.

இந்நிலையில் இந்த தீ விபத்து குறித்து சிவபாலன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Terrible fire accident in sack godown in madurai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->