இரண்டாவது திருமணம் செய்த மனைவியை கொலை செய்த விவாகரத்து கொடுத்த கணவன்..!
Tenkasi Woman Murder by First Husband She Divorced and Married Another One Man
இரண்டாவது திருமணம் முடித்த மனைவியை, விவாகரத்து கொடுத்த முதல் கணவன் கொலை செய்துள்ள பயங்கரம் அரங்கேறியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கல்லூத்து கிராமத்தை சார்ந்தவர் பொன்ராஜ் (வயது 30). இவர் விவசாய கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். திருநெல்வேலி அமாவட்டத்தில் உள்ள அருணாசலபுரம் கிராமத்தை சார்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் சங்கீதா (வயது 22). பொன்ராஜுக்கும் - சங்கீதாவுக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தம்பதிகள் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
நேற்று காலையில் பொன்ராஜ் வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார். சங்கீதா மற்றும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், அவரது வீட்டிற்கு வருகை தந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சங்கீதாவை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பி சென்றுள்ளார். இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பெண்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார்.
சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சென்ற பார்க்கையில் மர்ம நபர் தப்பியோடியதும், வீட்டிற்குள் சங்கீதா இரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் கண்டு பதறிப்போயினர். பின்னர், இது தொடார்பாக வீரகேரளம்புதூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில், " வாகைக்குளம் பகுதியை சார்ந்தவர் நாராயணன். இவரது மகன் கண்ணன் (வந்து 30). கண்ணனுக்கும் - சங்கீதாவுக்கு கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், திருமணம் முடிந்த சில மாதத்திலேயே குடும்ப பிரச்சனை காரணமாக கண்ணனை சங்கீதா பிரிந்து இருக்கிறார். பெரியவர்கள் சமாதானம் பேசியும் இருவரும் சமாதானம் ஆகாமல் இருந்துள்ளனர்.
இதனையடுத்து, இருதரப்பு ஒத்துழைப்பின் படி முறையான விவாகரத்து பெற்ற சங்கீதா, கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக பொன்ராஜை திருமணம் செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கண்ணன் ஸ்னாகீதாவை கொலை செய்துள்ளார் " என்பது தெரியவந்தது. கண்ணனை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tenkasi Woman Murder by First Husband She Divorced and Married Another One Man