வெட்டியாக நின்ற நால்வர்.. பையை சோதிக்கையில் பகீர். ஸ்தம்பித்துப்போன காவல்துறை.!!
Tenkasi Fake money distribution gang arrest by police
தென்காசி மாவட்டத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.15 இலட்சத்து 97 ஆயிரத்து 400 பறிமுதல் செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும், சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தவர்களை விசாரணை மேற்கொண்டனர்.
இதில், எதற்ச்சையாக அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த முகமது பாஷா (வயது 40), வீரசேகர லிங்கம் (வயது 35), மாரி செல்வராஜ் (வயது 35), சுடலை(வயது 50) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில், கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்றது தெரியவந்துள்ளது. நால்வரையும் கைது செய்த காவல் துறையினர், ரூ.15 இலட்சத்து 97 ஆயிரத்து 400 கைப்பற்றி, விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tenkasi Fake money distribution gang arrest by police