சுமார் பத்து லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் ஒரே வீட்டில் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


ஒரே வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22,000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர் போலீசார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கண்டகானபள்ளி  பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக ஓசூர் மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட போலீசார் கண்டகானப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒரு வீட்டில் 22 ஆயிரம் பாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இவற்றின் மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும்.

மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த சங்கர் மற்றும் ராஜண்ணா ஆகியோரை கைது செய்தனர். இன்னும் வேறு எங்கெல்லாம் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று அவர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். ஒரே வீட்டில் 22 ஆயிரம் மதுபாட்டில் விற்பனைக்கு பாதிக்கிவைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ten lakhs worth liquor bottles seized


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->