தூத்துக்குடி || கோவில் பூசாரி வெட்டிக் கொலை - 17 வயது சிறுவன் கைது.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்துநகர், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மூக்காண்டி மகன் ரவி. இவர் தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் பூசாரியாகவுள்ளார். குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தார். 

இந்த நிலையில், ரவிக்கு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த விஜயா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த 5 வருடங்களாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ரவி நேற்று இரவு கோவிலில் பூஜை முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் தாளமுத்துநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது 2 பேர் அவரை வழிமறித்து சரமரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். 
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்துச் சென்று ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் ரவிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதும், அந்த முன் விரோதத்தினால் அந்த சிறுவன் மற்றொரு நபருடன் சேர்ந்து சம்பவ இடத்தில் வைத்து வாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

temple priest murder in thoothukudi


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->