வாட்ஸ் அப்பில் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்.. போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


தன்னிடம் படிக்கும் ஒரு மாணவிக்கு ஆபாச படம் மற்றும் வசனம் அனுப்பி தொல்லை கொடுத்த ஒரு ஆசிரியரை போலீஸ் கைது செய்தது

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள தாசர்பட்டி அரசு பள்ளியில் மணிகண்டராஜ் என்ற 42 வயதான ஆசிரியர் அறிவியல் பாடம் எடுக்கிறார் .அவர் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாடம் எடுக்கிறார் .இந்நிலையில் அந்த ஆசிரியர் பள்ளி வாட்ஸ் அப் க்ரூப்பிலிருந்து ஒரு பத்தாம் வகுப்பு மாணவியின் போன் நம்பரை எடுத்தார் .பின்னர் அந்த, மாணவிக்கு தினமும் பல ஆபாச படங்களை அனுப்பி ,அந்த படத்திலிருப்பது போல் இருக்கலாமா?

போன்ற ஆபாச வசனங்கள் ,மற்றும் பாலியல் உணர்வுகளை தூண்டும் பேச்சுக்களை அனுப்பி தினம் தொல்லை கொடுப்பார் .
இதனால் அந்த மாணவி இதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்தார் .மேலும் அந்த வாத்தியாரும் அந்த மாணவியிடம் இதை யாரிடமாவது சொன்னால் மார்க் போட மாட்டேன் என்று மிரட்டியதால் அவர் ,இதை தன் பெற்றோரிடம் மட்டும் கூறினார். அதை கேட்டு கொதித்து போன அந்த பெண்ணின் பெற்றோர் அந்த ஆசிரியர் மீது ஹெட்மாஸ்டரிடம் புகார் கொடுத்தனர் .அவர் போலீசில் புகார் கொடுத்ததும் போலீசார் வழக்கு பதிந்து அந்த ஆசிரியர் மணிகண்டராஜை கைது செய்தனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher sexual Harrasment for school girl in WhatsApp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->