ஆசிரியர் வேலை தேடுறீங்களா.? நாளை வேலைவாய்ப்பு முகாம்.! தயாரா இருங்க.! - Seithipunal
Seithipunal


நாகர்கோவிலில் நாளை (செப்டம்பர் 18ம் தேதி) ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கின்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அனைத்து மாவட்டங்களிலும் மாதம் மற்றும் வாரம் தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாளை (செப்டம்பர் 18ஆம் தேதி) ஆசிரியர்களை தேர்வு செய்யும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் இளங்கலை, முதுகலை கல்வித் தகுதி உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.மேலும் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் வாய்ப்பு உண்டு. முகாமில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் www.tnschoolteachers.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teacher employment camp tomorrow in nagarkovil


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->