புதிய உச்சத்தை தொட்ட தமிழக குடிமகன்கள்! வெளியான புள்ளி விவரம்!
tasmac sales report 22 aug
கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. பின்னர் பல கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கொரோனா பரவல் அதிகம் இருந்ததால் சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை.
சென்னையில் தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு மாநகர காவல் எல்லைக்குள் உள்ள 720 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுவிற்பனை 250 கோடியை தாண்டி கொரோனா காலத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அதிகபட்சமாக மதுரையில் ரூ.52.45 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. திருச்சி ரூ.51.25 கோடியும், சென்னையில் ரூ.50.65 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது. சேலம் ரூ.49.30, கோவை ரூ.46.58 கோடிக்கு மதுவிற்பனையாகி உள்ளது.
English Summary
tasmac sales report 22 aug