திரைப்பட வசூலுக்கே வாராவாரம் டப் கொடுக்கும் டாஸ்மாக்.. இந்த வாரம் செம ஜோர் விற்பனை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தளர்வுகளுடன் மக்கள் நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஞாயிற்று கிழமைகளில் எவ்விதமான தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

அன்றைய நாளில் மதுபானம் வாங்கி அருந்த விருப்பப்படும் குடிமகன்கள், சனிக்கிழமைகளில் மதுபானங்களை மொத்தமாக வாங்கி வைத்து வருகின்றனர். இதனால் வாரத்தின் இறுதி நாட்களான சனிக்கிழமைகளில் டாஸ்மாக் வசூல் குவிந்து வருகிறது. 

அரசிற்கு வருவாயை எவ்விதமான பிரச்சனையும் இன்றி குடிமகன்கள் செலுத்தி வரும் நிலையில், வாரத்திற்கு வாரம் புதிய சாதனையை டாஸ்மாக் வசூல் படைத்தது வருகிறது. இந்த வாரத்தில், நேற்று ஒரேநாளில் ரூ.189 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.85 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.42 72 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 40.70 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.38.90 கோடிக்கும் மதுபானம் விற்பனை ஆகி இருக்கிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Tasmac collection 1 August 2020 Rs 189 Crore


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->