அனுமதியின்றி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.! அண்ணாமலை மீது ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் திமுக நிர்வாகி சைதை சாதிக் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பு குறித்து ஆபாசமாக பேசினார். 

இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதனால் திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், இன்று சைதை சாதிக் பேச்சை கண்டித்து பாஜக கட்சியின் மகளிரணி சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.

இதையடுத்து, இந்த ஆர்ப்பாட்டம் தகுந்த அனுமதியின்றி நடைபெற்றதால் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மகளிரணி நிவாகிகள் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். 

அதன் பின்னர், சிலமணி நேரத்திற்கு பிறகு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், மாநில தலைவர் அண்ணாமலை மீது ஆறு பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும், 370 பாஜக தொண்டர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tamilnadu bjp leader annamali arrested


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->