#BREAKING: கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!
Tamilnadu 18 districts holiday due to heavy rain
மழை காரணமாக இன்று 18 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழையானது தற்போது தீவிரம் அடைந்துள்ளது. நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் இன்று தமிழகம், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போன்று 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், விழுப்புரம், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 18 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
English Summary
Tamilnadu 18 districts holiday due to heavy rain