ஸ்டாலின் பழமொழிக்கு, பதில் மொழி கூறும் தமிழிசை.!! இப்படியெல்லாமா பேசுவது.?!
tamilisai says about stalin
திமுக சார்பில் தமிழக சட்டசபை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொடுத்து இருந்தது. ஆனால், தற்போது அதனை வற்புறுத்தப் போவதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திடீரென திமுகவின் இந்த பின்வாங்கல் அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
மூன்று எம் எல் ஏக்களின் பதவியை பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதனால்தான் தீர்மானத்தை கொடுத்தோம். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொடுத்துவிட்டு நாங்கள் பதுங்கிக்கிறோம் என்கிறார்கள். புலி பாய்வதற்கு முன்பாக பதுங்குவது வழக்கம்.
ஆனால், ஓடி ஒளிய வேண்டிய நேரத்தில் நாங்கள் ஓடுவோம் என அவர் தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் இந்த கருத்தை பாஜக தமிழக தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.
அதில், "புலி பதுங்குவது பாய்வதற்கு என ஸ்டாலின் கூறினார். பூனையாக அல்லவா இருக்கின்றது. திமுகவின் குடும்பத்தினர் மட்டும் தான் எம்பி எம்எல்ஏ பதவிகளை அனுபவித்து வருகின்றனர். ஸ்டாலின் அவர் மீதே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்." என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
tamilisai says about stalin