"பேட்டரி எல்லாம் ஜார்ஜ் போய்டும்" தமிழிசையின் அதிரடி விமர்சனம்!! அவர்களையும் விட்டுவைக்கவில்லை!!  - Seithipunal
Seithipunal


பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், 'சீமான், தினகரன், கமல்ஹாசன் போன்றவர்கள் இப்போது சலசலப்பை ஏற்படுத்துவார்கள். பின்னர் சலித்துப் போய் உட்கார்ந்து விடுவார்கள். டார்ச்லைட்டும் சார்ஜ் தீர்ந்து விட்டால் எரியாது' என்று கூறியுள்ளார். 

நேற்று தூத்துக்குடி கோவில்பட்டியில் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, அவர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "இனிமேல், மக்கள் கமல்ஹாசன் போன்றவர்களை நம்ப மாட்டார்கள். 

Image result for kamal seithipunal

மக்களின் நம்பிக்கையை பெறவேண்டுமானால், அடிப்படையில் ஆழமான மக்கள் சிந்தனை வேண்டும். மேலும், அமைப்பு ரீதியான கடுமையான உழைப்பும், தலைவர்களாக மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மையும் வேண்டும்.

ஒரு விஷயம் புதிதாக வரும்போது, எப்போதுமே சில சலசலப்புகள் இருக்கும். பேட்டரி பவர்ஃபுல்லாக இருக்கும் போது தான் டார்ச் லைட் எரியும். அதன்பின்னர், பேட்டரி ஜார்ஜ் தீர்ந்துவிடும், பிறகு ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடும்.

Image result for seeman dhinakaran seithipunal

புதிய கட்சிகளுக்கும் அனைத்திற்கும் இதே நிலை தான். தினகரன், சீமான், கமல்ஹாசன் எல்லோருமே அரசியலில் இப்போது சலசலப்பை ஏற்படுத்துவார்கள். சில நாட்களுக்கு பின்னர் சலித்துப் போய் உட்கார்ந்து விடுவார்கள" என அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai press meet thuthukudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->