டாப் கியரில் அந்த 3 தொகுதிகள்.. 9 மணி வாக்குப்பதிவு நிலவரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஒன்பது மணி நிலவரப்படி 12.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 15.10% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சம் மத்திய சென்னையில் 8.59% வாக்குகளும்,  திருவள்ளூர் தனி தொகுதியில் 12.31% வாக்குகளும், வடசென்னை தொகுதியில் 9.73% வாக்குகளும், தூத்துக்குடியில் 11.62% வாக்குகளும், வேலூரில் 12.76% வாக்குகளும், அரக்கோணத்தில் 12.64% வாக்குகளும் பதிவாகியுள்ளது. 

அதேபோன்று தென் சென்னையில் 10.08% வாக்குகளும், கன்னியாகுமரியில் 11.92% வாக்குகளும், தர்மபுரியில் 15.04% வாக்குகளும், திருவண்ணாமலையில் 12.8% வாக்குகளும், ஆரணியில் 12.69% வாக்குகளும், விழுப்புரத்தில் 13.97% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

மேலும் சேலத்தில் 14.79% வாக்குகளும், நாமக்கல்லில் 14.36% வாக்குகளும், ஈரோட்டில் 13.37% வாக்குகளும், திருப்பூரில் 13.13% வாக்குகளும், நீலகிரியில் 12.18% வாக்குகளும், கோவையில் 12.16% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

அதேபோன்று சிதம்பரத்தில் 12.9% வாக்குகளும், மயிலாடுதுறையில் 12.08% வாக்குகளும், நாகையில் 12.98% வாக்குகளும், தஞ்சையில் 12.91% வாக்குகளும், சிதம்பரத்தில் 12.06% வாக்குகளும், மதுரையில் 11% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் 11.18% வாக்குகளும், காஞ்சிபுரத்தில் 12.25% வாக்குகளும், அரக்கோணத்தில் 12.64% வாக்குகளும், கிருஷ்ணகிரியில் 12.57% வாக்குகளும் பதிவாகியுள்ளது. பொள்ளாச்சியில் 13.36% வாக்குகளும், திண்டுக்கல்லில் 13.16% வாக்குகளும், கரூரில் 14.41% வாக்குகளும், திருச்சியில் 11.82% வாக்குகளும், பெரம்பலூரில் 14.35% வாக்குகளும், கடலூரில் 12.22% வாக்குகளும் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே சேலம் தர்மபுரி கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் 15 சதவீத வாக்குகளை கடந்து பதிவாகியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu polling status at 9 oclock


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->