“ அமைதியை விட வலிமையான ஆயுதம் ஏதும் இல்லை “ ... ஆழித்தேரோட்டத்தில் கவனம் ஈர்த்த சூர்யா ரசிகர்கள்...! - Seithipunal
Seithipunal


உக்ரைன் போரை நிறுத்துவத்த கோரி ஆடி தேரோட்டத்தில் பதாகைகளை ஏந்திய சூர்யா ரசிகர்கள்.

திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் உள்ள ஆழிதேர் ஆசியாவில் மிகப்பெரிய தேர் என்ற பெருமையை பெற்றது. நேற்று ஆழித் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

காலை 08:10  மணிக்கு தேவை வடம் பிடித்து இழுக்க ஆரம்பித்தனர் . அதனை தொடர்ந்து 4 மாட வீதிகளிலும் தேர் அசைந்து வரும் காட்சி காண்போரின் கண்களைக் கவர்ந்தது. தேர் உலா வரும் 4 மாட வீதிகளிலும் திருவாரூரை சேர்ந்த சூர்யா ரசிகர்கள் வெள்ளை நிற உடை அணிந்து “ அமைதியை விட வலிமையான ஆயுதம் ஏதும் இல்லை “ எனும் வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வந்தனர்.

பொதுமக்கள் குழப்பமடைந்த நிலையில் அவர்களுக்கு உக்ரைன்  போரை நிறுத்தக்கோரி உலக மக்களின் கவனத்தை ஈர்க்கவே இந்த பதாகைகளுடன் நிற்பதாக சூர்யா ரசிகர்கள் விளக்கம் அளித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Surya Fans Attract Devoters


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->